அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை அமிர்தராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் ராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மனைவி உள்ளார்.

இதுகுறித்து அறிந்த ராஜாவின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் ராஜாவுக்கு 23 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.