அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாப்பலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரக்ஷனா, திலீபன் ராஜ், அகிலேஸ்வரன் என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த நான்காம் தேதி பாண்டியன் தனது வீட்டில் திடீரென எறும்பு மருந்தை தின்று மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாண்டியன் கண்விழித்த பிறகு தான் உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.