அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாகாணத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த ஏர் ஆம்புலன்ஸ் நேற்று இரவு நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக வெதர் போர்டு நகரில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. குறிப்பிட்ட மருத்துவமனையில் நோயாளியை அனுமதித்து விட்டு ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏர் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.