தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் காஜல் அகர்வால் மற்றும் ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் நிலையில் நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.‌ இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு மீமை பகிர்ந்து உள்ளார். அதில் விமான நிலையங்களில் எதற்காக உடற்பயிற்சி நிலையம் இல்லை. நான் இரண்டரை மணி நேரமாக காத்திருக்கிறேன்.

நான் இங்கு உட்கார்து இதைப்பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த மீமில் இருக்கிறது. இதற்கு நடிகை ராஷ்மிகா உண்மைதான் என்று பதிவிட்டுள்ள நிலையில், நடிகை ராஷ்மிகாவின் பதிவை காஜல் அகர்வால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மேலும் நானும் இதைப்பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார்.