கேதார்நாத் யாத்திரை பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையின் மேற்பகுதியில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக சார் தாம் யாத்திரை பதிவு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு செய்து அடுத்த கட்ட முடிவு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் அரசு ஞாயிற்றுக்கிழமை புனித யாத்திரைக்கான ஆலோசனையை வெளியிட்டதோடு வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப பக்தர்கள் கவனமாக இருக்கவும் தங்கள் யாத்திரையை தொடங்கவும் வலியுறுத்தியது.