செட்டிநாடு குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரி சோதனையில் ரூபாய்.23 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.