ஏடிஎம் கார்டு உள்ள பொது மற்றும் தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு உள்ளது. எஸ் பி ஐ கோல்ட் கார்டில் 2 லட்சம் ரூபாய் வரையும், விசா சிக்னேச்சர் கார்டில் 10 லட்சம் ரூபாய் வரையும் காப்பீடு பெறலாம். எச்டிஎப்சி பிளாட்டினம் டெபிட் கார்டில் 5 லட்சம் மற்றும் icici டைட்டானியம் கார்டில் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற முடியும். ஒரு நபர் இறந்து மூன்று மாதங்களுக்குள் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பித்தால் காப்பீடு தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.