சென்னை எழும்பூர் மற்றும் செங்கோட்டை விரைவு ரயில் திருச்சி மற்றும் விருதுநகர் இடையே பயண நேரத்தில் இன்று  ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 1.50 மணிக்கு இந்த ரயில் புறப்படும். அதனைப் போலவே புதுக்கோட்டையில் அதிகாலை 2.47 மணிக்கு புறப்படுவதற்கு பதில் 2.35 மணிக்கு புறப்படும்.

காரைக்குடியில் அதிகாலை 3.20 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் 3.10 மணிக்கு, தேவகோட்டையில் அதிகாலை 3.27 மணிக்கு புறப்படுவதற்கு பதில் 3.17 மணிக்கு, சிவகங்கையில் அதிகாலை 3.54 மணிக்கு பதிலாக மூன்று புள்ளி 44 மணிக்கு, மானாமதுரையில் அதிகாலை 4.22 மணிக்கு பதிலாக 4.12 மணிக்கு, அருப்புக்கோட்டையில் அதிகாலை 5.05 பதிலாக 4.55 மணிக்கு இந்த ரயில் புறப்படும் எனவும் விருதுநகரில் இருந்து வழக்கம் போல அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் எனவும் பிறரையில் நிலையங்களுக்கான வழக்கமான நேரத்தில் புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.