உலக பணக்காரர்களில் ஒருவராகிய எலான் மஸ்கின் மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதி கிடைத்திருக்கிறது. இதையடுத்து எலான் மஸ்க் விரைவில் மனித மூளையில் ஸ்மார்ட் சிப்களை பொருத்தி வராலாற்று சிறப்புமிக்க ஆராய்ச்சியை துவங்கலாம்.

மனித மூளையில் பொருத்தப்பட்ட நியூராலிங்க் சாதனத்தின் தாக்கத்தினை எலான் மஸ்க் தற்போது ஆய்வு மேற்கொள்ள முடியும். எங்கள் முதல் மனித மருத்துவ ஆய்வை துவங்க FDAன் ஒப்புதல் பெற்றுள்ளோம் என்பதை பகிர்ந்துக்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என நியூராலிங்க் டுவிட் செய்து உள்ளார்.