ஜார்க்கண்ட் குர்மாஹட் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது மூன்று நண்பர்களுடன் கால்பந்தாட்ட போட்டி பார்த்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வழியில் எரும மாடு ஒன்றின் மீது சிறுவனின் பைக் மோதியுள்ளது.

இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர். தான் நஷ்ட ஈடு கொடுப்பதாக சிறுவன் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.