பப்புவா நியூ கினியாவில் உள்ள ஒரு மலையில் கடந்த வாரம் எரிமலை வெடிப்பு நடந்தது. இதனால் சுமார் 26 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளுக்காக அந்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் இந்தியா இரங்கல் தெரிவித்தது.

இந்நிலையில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க நிவாரண உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.