பீகாரின் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி ஒருவர் புகைப்பிடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது அருகில் இருப்பவர்கள், புகைப்பிடிப்பதை நிறுத்தாவிட்டால், டாக்டரிடம் புகார் அளிப்போம் என கூறுகின்றனர்.

ஆனால் மூதாட்டியோ, ‘டாக்டரை கூப்பிடு’ என அசால்ட்டாக கூறிவிட்டு மீண்டும் ஹாயாக புகை பிடிக்கிறார். வீடியோ வைரலான நிலையில் மூதாட்டி செயலுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.