மதிமுக எம்பி கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டார் என பாஜக பிரமுகரும், தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்திரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருந்து கணேசமூர்த்தி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து சென்னையில் நேற்று பேசிய தமிழிசை, கணேசமூர்த்தியின் இறப்பு என மனத்திற்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. அவரின் இறப்பிற்கு நான் வைகோவையும் குற்றஞ்சாட்டுவேன், ஸ்டாலினையும் குற்றஞ்சாட்டுவேன் எனத் தெரிவித்தார்.