இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் எம்பிபிஎஸ் சேர்ந்தவர்கள் இடர்பாடு இல்லாமல் முதுநிலை படிப்புகளில் சேர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் சேர்ந்தவர்களின் பயிற்சி விவரங்களை ஆணைய இணையதளம் மூலமாக பல்கலைக்கழகங்கள் அனுப்ப வேண்டும் எனவும் அதன் அடிப்படையில் இந்த ஆண்டு முதுநிலை நீட் தேர்வை நடந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.