புதிய வகை ஜெஎன் 1 கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ள நிலையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கொரோனா கட்டுப்பாட்டை பீகார் அரசு அமல்படுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பிரச்சனை இருந்தால் உடனே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.