மருத்துவ படிப்புகளில் விரும்பும் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ல் இருந்து ஆக.3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவகாசம் நீட்டிப்பு காரணமாக இருக்கை ஒதுக்கீடு முறை ஆக.4,5ல் நடைபெறும். மாணவர்களுக்கான மருத்துவக் கல்லூரி இடங்களின் முடிவுகள் ஆக. 6ம் தேதி வெளியிடப்படும் என மருத்துவ சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.