மதுரை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எனது மூத்த சகோதரர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். எம்ஜிஆருக்கு பிறகு அரசியலுக்கு வந்த எந்த நடிகரும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என மக்கள் நினைக்கிறார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.