தமிழகம் முழுவதும் பெற்றோர் பலரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 22,000 மேற்பட்ட குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் அதிகாரிகள் இந்த ஆண்டு நான்கு லட்சம் பேர் வரை அரசு பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.