தனது செல்போனை தமிழக உளவுத்துறை போலீசார் ஒட்டு கேட்பதாக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். என் மனைவி, சகோதரி, நண்பர்களின் செல்போன்களையும் ஒட்டுக் கேட்கின்றனர். என்னை உளவு பார்த்து டி.ஆர்.பி.ராஜாவுக்கு உளவுத்துறை ஐஜி தகவல் தெரிவிக்கிறார். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு தமிழக உளவுத்துறை அதிகாரிகள் சிறைக்கு செல்வார்கள் என்று எச்சரித்துள்ளார்.