ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி பாஜகவின் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிஜூ ஜனதா தலை எம்எல்ஏக்கள் அரவிந்த தாளி, பிரேமானந்த நாயக் ஆகியோர் பாஜகவில் அண்மையில் சேர்ந்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பேருக்கு எதிராகவும் சபாநாயகர் இடம் பிஜூ ஜனதா தளம் புகார் அளித்தது. இதனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இரண்டு பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.