தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக நிறுத்தியதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பச்சை பொய் சொல்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகரில் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆளும் திமுக அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்து மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறது. மடிக்கணினி மற்றும் அம்மா கிளினிக் உட்பட அனைத்து திட்டங்களையும் திமுக நிறுத்திவிட்டது என தெரிவித்துள்ளார்.