ரஜினி தன்னை அவருடைய வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறியதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நான் மேயராக இருந்தபோது மகன் திருமணத்திற்கு அழைக்க ரஜினி வீட்டுக்கு செல்ல நேரம் கேட்டிருந்தேன். ரஜினி எனக்கு போன் செய்து வேலை பளுவுக்கு இடையே இதற்காக வரவேண்டாம். வேறு யாரிடமாவது கொடுத்து அனுப்புங்கள் என்றார். நான் எனது மகனிடம் பத்திரிகை கொடுத்து அனுப்பிய நிலையில் ரஜினி திருமணத்திற்கு வந்தார் என்று அமைச்சர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.