நடிகை விஜயலட்சுமி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், நான் கர்நாடகாவில் வாழ சிரமப்படுகிறேன். கடந்த வருடம் இப்படி தவித்துக் கொண்டிருக்கும் போது தான் சீமான் வந்தார். ஆனால் மதுரை செல்வத்தால் எல்லாம் நாசமாகிவிட்டது. அதனால்தான் வழக்குப் பதியும் நிலைக்கு தள்ளப்பட்டேன். சீமானுக்கு எந்த கவலையும் இல்லை.

நான் இந்த வாரம் துயரமான முடிவு எடுக்கப் போகிறேன். 12 வருடமாக நான் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்காக யாரும் இல்லை. நான் முடிவைத் தேடிக் கொள்ளப் போகிறேன், இதற்கு சீமான் தான் காரணம் என்று விஜயலட்சுமி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.