90களில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா. ‌ இவர் தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா என பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் குணசித்திர வேடத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் நடிகை மனிஷா கொய்ராலா தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களை தற்போது பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டியில், ‘நான் குடிப்பழக்கத்தால் அவதிப்பட்டேன். கேமராவுக்கு முன்பு தைரியமாக நடிக்க மது அருந்த தொடங்கினேன். அதுவே நாளடைவில் என் பழக்கமாக மாறிவிட்டது. சில நேரங்களில் மது அருந்தினால் மட்டும்தான் எனக்கு தூக்கமே வரும் என்ற நிலைக்குச் சென்று விட்டேன் மது என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டேன்’ என கூறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அதிலிருந்து மீண்டு தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.