நடிகர் ரவிமோகன் (ஜெயம் ரவி) நடத்திய அவசரப் பத்திரிகையாளர் சந்திப்பில், தனக்குத் தொடர்ச்சியாக ரத்த வாந்தி வந்து கொண்டிருப்பதாகக் கூறி ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் அதிர வைத்துள்ளார். தன் மீது யாரோ மாந்திரீகக் கிரியைகள் மற்றும் பிளாக் மேஜிக் (Black Magic) செய்வதாக அவர் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

​உடல்நிலை சரியில்லாமல் போனதற்கான இந்த அதிர்ச்சிப் பின்னணியை அவர் வெளிப்படையாகப் பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து விவகாரங்களுக்கு மத்தியில், தன் உடல்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள இந்த பகீர் குற்றச்சாட்டு தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.