உத்தரப்பிரதேசம் மவு மாவட்டத்தில் வசித்து வருபவர் காவலர் கவுரவ் சவுத்ரி. இவர் இந்தியா- நேபாளம் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கவுரவ் சவுத்ரி விடுமுறை கேட்டு, தனது உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் கவுரவ் சவுத்ரி, சமீபத்தில் திருமணம் முடிந்து பணியில் சேர்ந்ததாகவும் ஜனவரி 10ம் தேதி இன்று தன் மருமகனின் பிறந்தநாளுக்கு ஊருக்கு திரும்பி வருவதாக மனைவியிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் தற்போது ஊருக்கு வரமுடியாத சூழல் நிலவுவதாக மனைவியிடம் தெரிவித்தது முதல் அவர் தன் செல்போன் அழைப்புகளை எடுக்க மறுப்பதாக கடிதத்தில் காவலர் கூறியுள்ளார். 7 நாட்கள் விடுமுறை கோரி காவலர் கவுரவ் சவுத்ரி கடிதம் எழுதி இருந்த நிலையில், 5 நாட்களுக்கு உயர் அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளனர். உயர் அதிகாரிக்கு காவலர் எழுதிய விடுமுறை கடிதமானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.