கர்நாடகாவில் காதல் என்ற பெயரில் கல்லூரி மாணவி நேஹா என்ற இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் குற்றவாளியான ஃபயாஸின் தாயார் மும்தாஜ் மன்னிப்பு கேட்டார். “என் மகன் சார்பாக, கர்நாடக மக்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். பெண்ணின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கிறேன். என் மகன் செய்தது தவறு. சட்டப்படி தன் மகனுக்கு தண்டனை வழங்க வேண்டும்” என கண்ணீர் விட்டு அழுதார்.