தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சோஹைல் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவரது விவாகரத்துக்கு ஹன்சிகாதான் காரணம் என்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் இது குறித்து ஹன்சிகா முதல்முறையாக வாய் திறந்துள்ளார். சோஹலை எனக்கு முன்பே தெரியும் என்பதால், அவரது விவாகரத்துக்கும் நான் காரணம் என்று அர்த்தம் இல்லை என்றார்.