சமூகத்தில் தற்போது பெண்கள் தொடங்கி குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகின்றது. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இளையராஜா தனது இசையில் விழிப்புணர்வு பாடலை உருவாக்கி இருக்கின்றார்.

இந்த பாடல் குழந்தைகள்-பெரியவர்கள் இடையே பயனுள்ள தகவல் தொடர்பு அவசியமாக இருக்க வேண்டும் எனவும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும் எனவும் தவறினால் குழந்தைக்கு மனச்சோர்வை ஏற்படுத்தி கடுமையாக துன்புறுத்தும் எனவும் இதனை வலியுறுத்தும் வகையில் இந்த பாடல் ஆனது உருவாகி இருக்கின்றது.

இந்தப் பாடல் “யார் இந்த பேய்கள்” என்ற தலைப்பில் உருவாகி இருக்கின்றது. மேலும் பாடலை பா.விஜய் எழுதியிருக்கின்றார், இவன் சங்கர் ராஜா பாடியிருக்கின்றார். கிருத்திகா உதயநிதி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார்.