எனது கட்சியில் பிரதமர் வேட்பளார் இல்லையா என கேட்கிறார்கள் எனது கட்சியின் பிரதமர் வேட்பாளர், நான் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பவர்கள்தான் பிரதமர் வேட்பாளர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது  திமுக மன்மோகன் சிங் ஆட்சியில் கூட்டணி இருந்தபோது ஏன் சுங்க சாவடிகளை அகற்றவில்லை. திமுக தான் நீட் தேர்வு, ஜிஎஸ்டி, சிஐஏ, என்ஐஏ, போன்றவற்றை கொண்டு வந்தது. தற்போது திமுக புனிதரை போல் செயல்படுகிறது என விமர்சித்தார்.