தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. மல்லிகை ரூ.1300, பிச்சி ரூ.700, முல்லை ரூ. 700, கனகாம்பரம் ரூ.800, அரளி ரூ.500, செண்டு பூ ரூ.70, கோழி கொண்டை ரூ.50, சம்பங்கி ரூ. 450, பன்னீர் ரோஸ் ரூ.200, செவ்வந்தி ரூ.200, துளசி ரூ.40க்கும் விற்பனையாகிறது. நல்ல நாள் என்பதால், அதிக விலை கொடுத்து பூக்களை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.