உத்திரபிரதேச காவல்துறை கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றது. இந்த தேர்வுக்கான அனுமதி அட்டை நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

நேற்று தேர்வு நடந்து முடிந்த நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர் அளித்த புகாரியின் பெயரில்  சைபர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அதனைப் போலவே கடந்த ஆண்டுகளில் அனுமான், ராமர் மற்றும் நடிகை சன்னி லியோன் உள்ளிட்டோரது புகைப்படங்கள் அச்சிடப்பட்ட அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.