2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பார்களில் சிசிடிவி ஐபி கேமராக்களை பொருத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிர்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கான செலவின கண்காணிப்பு குறித்த இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக்கூட்டம் நடத்திய நிலையில் எஃப் எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற பாரதம் மற்றும் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி ஐபி கேமராக்களை பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மார்கழியில் சிசிடிவி ஐபி கேமராக்களை பொருத்தவும் பொருத்தியதற்கான சான்றுகளை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.