இயற்கையின் விசித்திரங்களையும், வாயில்லா ஜீவன்களின் கருணையையும் விளக்கும் ஒரு அற்புதமான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மீனவர் தான் பிடித்த மீன் ஒன்றை அருகில் இருந்த ஒரு பறவைக்குப் பசிக்காக உணவாக வழங்குகிறார். அந்தப் பறவை அந்த மீனைத் தனது அலகால் கவ்விப் பிடித்துக் கொள்கிறது. எப்போது அந்தப் பறவை மீனை விழுங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், அங்கு ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது.
Fisherman gives a bird the fish he caught and the bird releases the fish back in the water.
What life lesson you have learned from this? pic.twitter.com/Nu3xdQ2FJR
— Woke Eminent (@WokePandemic) February 21, 2026
மீனைத் தனது அலகில் கவ்விய அந்தப் பறவை, அதனைச் சாப்பிடாமல் நேராகத் தண்ணீருக்கு அருகில் கொண்டு சென்று மீண்டும் தண்ணீரிலேயே விடுவித்தது. துடிதுடித்துக் கொண்டிருந்த அந்த மீன், உயிர் பிழைத்த சந்தோஷத்தில் தண்ணீருக்குள் நீந்திச் சென்றது. மீனவர் கொடுத்த உணவைத் தானாக முன்வந்து மீண்டும் தண்ணீரிலேயே கொண்டு சேர்த்த அந்தப் பறவையின் செயல், மனிதர்களுக்குப் பெரிய பாடத்தைப் புகட்டியுள்ளது. “பசியை விட ஒரு உயிரைக் காப்பாற்றுவது தான் பெரியது” என்பதை அந்தப் பறவை நிரூபித்துள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
