பொதுவாகவே பெண்கள் அனைவரும் தங்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பார்கள். குறிப்பாக எந்த இடத்திலும் தங்களுடைய நேரத்தை வீணாக்காத பெண்களை பலரும் பார்த்திருப்போம். அப்படி பெங்களூரு போக்குவரத்து நெரிசல் அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் தலை வலியாக இருந்து வரும் நிலையில் ஒரு பெண் புதுமையாக யோசித்தார்.

அதாவது அலுவலகத்தில் இருந்து காரில் வீடு திரும்பும் நேரத்தில் டிராபிக்கில் நிற்கும்போது எல்லாம் காய்கறிகளை வெட்டி முடித்தார். அது தொடர்பான புகைப்படத்தை அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் அந்தப் பெண் நேரத்தை சரியாக பயன்படுத்தி வருவதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.