உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சங்க்ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிசுபால் என்ற இளைஞர், தனது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றார். ஆனால், அங்கு இருந்த ஒரு காவலர், அவரது புகாரைக் கேட்காமல், சிசுபாலின் முடியைப் பிடித்து இழுத்து, பலமுறை கன்னத்தில் அறைந்தார். இந்தக் காட்சி வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது, மேலும் காவல் நிலையத்தில் இருந்த பலரும் இதை வேடிக்கை பார்த்தனர், ஆனால் யாரும் தடுக்க முயற்சிக்கவில்லை.
इंसाफ मांगने पर मिला थप्पड़…
उत्तर प्रदेश के बरेली ज़िले के सिरौली थाने में मोटरसाइकिल चोरी की शिकायत करने गए एक मजदूर को दरोगा ने थप्पड़ मार दिया, शिकायतकर्ता मजदूर पर हाथ उठाने वाले पुलिसकर्मी की पहचान सत्येंद्र के रूप में हुई है, घटना का वीडियो वायरल होने के बाद जिले के… pic.twitter.com/2BR6xsdPdH
— NDTV India (@ndtvindia) September 13, 2025
இந்த வீடியோ வைரலானதால், பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. புகார் அளிக்க வந்தவரையே இப்படி அடிப்பதால், மக்கள் தங்கள் பிரச்சினைகளை எங்கு எடுத்துச் செல்வார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இதையடுத்து, தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் அன்ஷிகா வர்மா இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சிரௌலி காவல் நிலைய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
