பாகுபலி படத்தின் மூலம் கவனம் பெற்ற ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து ராஜமவுலி மனம் திறந்து பேசி உள்ளார். அதில் இயக்குனர் வெற்றிமாறனை பார்த்து பிரமித்து போனதாக பல மேடைகளில் ராஜமவுலி கூறியுள்ளார்.

அதிலும் குறிப்பாக தனுஷை வைத்து ஆடுகளம் திரைப்படம் மிகவும் தத்ரூபமாக இருந்ததாகவும் வேறு யாராலும் இந்த படத்தை இவ்வளவு அழகாக எடுத்து விட முடியாது என ராஜ மவுலி கூறியிருந்தார். எப்படி தமிழ் இயக்குனர்களில் வெற்றிமாறன் பிடிக்குமோ தமிழ் நடிகர்களில் தனுஷை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் வருங்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் தனுஷ் படத்தை தான் இயக்க இருப்பதாக சொல்லியுள்ளார்.