பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 950 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷாருக்கான் அடிக்கடி தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடுவார்.

அப்போது ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம் உங்களுக்கு செல்ல பிராணிகள் பிடிக்குமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் ஷாருக்கான் எனக்கு செல்லப்பிராணிகள் பிடிக்கும். என்னிடம் நிறைய செல்லப்பிராணிகள் உள்ளது. ஆனால் அவற்றின் புகைப்படங்களை நான் சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டேன். மேலும் என்னை விட என் செல்ல பிராணிகள் பிரபலம் ஆவதை நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.