விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதில், வலுவான போட்டியாளராக மக்களாலும் பிக்பாஸ் போட்டியாளர்களாலும் பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனி, ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பிரதீப் தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கியமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதாவது “என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் அனுப்ப நினைத்தால் எனக்கு 2 Red Card வேண்டும். எனக்கு எதிராக சதி செய்த 2 பேரை வெளியேற்ற வேண்டும், அதோடு நான் 7வது வாரத்தின் கேப்டன் ஆக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.