உத்திரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஹரி ஓம் சிங் (48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் நான் உன்னை அதிகமாக காதலிக்கிறேன். உன்னை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ இல்லாத விடுமுறை தினங்கள் மிகவும் மோசமாக இருந்தது. இந்த கடிதத்தை படித்தவுடன் கிழித்து விட்டு என்னை தனியாக வந்து பார்க்கவும் என்று எழுதப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து மாணவி அதிர்ச்சி அடைந்த நிலையில் மாணவியின் தந்தை சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு ஆசிரியர் மாணவியின் தந்தையை மிரட்டியதோடு வெளியில் சொன்னால் உங்கள் மகளை கடத்தி சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் மாணவிக்கு ஆசிரியர் எழுதிய காதல் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒரு ஆசிரியர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.