ஹரியானா மாநிலம் பல்வார் பகுதியை சேர்ந்தவர் அசரி. இவரது மகன் முஸ்தகீம். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி அளவில் வீட்டிற்கு வந்து தாய் அசரியிடம் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அசரி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் கோபம் கொண்ட முஸ்தகீம் நாட்டுத் துப்பாக்கி கொண்டு தனது தாயை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன அசரி சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் முஸ்தகீமை கைது செய்தனர்.