சம்மதத்துடன் ஏற்படும் ஆண் – பெண் தொடர்பு வன்கொடுமை ஆகாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் ஆனவர் என்று தெரிந்த பின்பும் திருமணமாகி குழந்தைகள் உள்ள பெண் ஒருவர் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கள்ளத்தொடர்பில் இருந்து விலக முயன்றார். அதற்கு அந்த ஆண் சம்மதிக்கவில்லை.

இதனை தொடர்ந்து தன்னுடன் தகாத உறவில் இருந்த நபர் மீது அந்த பெண் அளித்த புகாரை எதிர்த்து ரத்து செய்ய கோரிய வழக்கில், இது வன்கொடுமை ஆகாது எனக் கூறி கேரள உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.