தென்னிந்திய சினிமா திரை உலகில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவர் ராஜசேகர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளராகவும் நடிகர் இருந்தார். பின் இவர் சின்னத்திரையில் நடிகராகவும் நடித்து இருந்தார். இதனிடையே இவர் தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் நடிகர் ராஜசேகர் காலமானார்.

மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா சென்னையில் வசித்து வருகிறார். இவரது கணவர் வாங்கிய வீட்டிற்கு இன்னும் 35 லட்சம் கட்டவில்லை என, வங்கி அதிகாரிகள் இவரிடம் பணம் கேட்டுள்ளார்களாம். இந்த வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறேன். என்னால் எப்படி அவ்வளவு பணம் கொடுக்க முடியும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஒருநாள் திடீரென்று எனக்கு எதாவது ஆகிவிட்டால் உன் நிலைமை என்னவாகும் என்று என்னுடைய கணவர் பயந்தது போலவே நடந்து விட்டது.  எந்த நேரத்திலும் என்னை வீட்டை விட்டு வெளியில் தள்ளி நடுரோட்டில் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். மேலும், நடிகர்களிடமும், முதல்வரிடமும் உதவி கோரியுள்ளார்.