தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷால். இவர் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் லைட் மேன் ஆக குமணன் சாவடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென லைட் கம்பம் அறுந்து விழுந்து முருகனின் நெற்றியில் பட்டது.

இதில் அவருக்கு  காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். கடந்த வாரம் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் சண்டைக் காட்சியின் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்றதால்  விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது நாளாக மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.