தொட்டிலை ஆட்டுவதும் பிள்ளையை கிள்ளுவதும் பாஜக மற்றும் அதிமுகவினர்தான் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அரசு விருந்தினர் மாளிகையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஆளுநர் சென்னா ரெட்டி மீது அதிமுகவினரே முட்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஞாபகப்படுத்துகிறேன். இவர்கள்தான் பெட்ரோல் குண்டு வீச்சில் இருக்க வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இதே போன்ற சம்பவங்கள் அரங்கேரி கொண்டே இருக்கும். எந்த குற்றச்செயலிலும் திமுக ஈடுபடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.