தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. அதில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது நிலையில் ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அவர் ஆளுநர் அரசின் கொள்கைக்கு மாறாக தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம். அதோடு அச்சடிக்கப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆளுநர் உடனடியாக அவையை புறக்கணித்துவிட்டு சென்றார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதல்வர் என்றால் அது நம் முதல்வர் ஸ்டாலின் தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். இதுபற்றி நிகிழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சட்டசபையில் தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் ஒரு சம்பவத்தை நம் தலைவர் செய்துள்ளார். பொதுவாக நம் தலைவர் சட்டப்பேரவையில் வெளியிடும் அறிவிப்பால் எதிர்கட்சிகளைதான் ஓட விடுவார். ஆனால், இன்று ஆளுநரையே ஓட விட்டு இருக்கிறார் என்றார்.