எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.12,500 நிவாரணம் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கொட்டியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மக்கள் நிவாரணம் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் அரசு 22 மீனவ கிராமங்களை சேர்ந்த 2,300 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் அறிவித்துள்ளது. இதேபோல், பாதிக்கப்பட்ட மீனவர்களின் 700 படகுகளுக்கு தலா ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. தொடர்ந்து எண்ணெய் அகற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.