மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.  இந்நிலையில் மத்திய அரசு நிதியுதவி வழங்கினால், முதல்வர் ஸ்டாலின் ரூ.20 ஆயிரம் கூட நிவாரணமாக வழங்கத் தயாராக இருக்கிறார் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், ‘முதல்வர் ஸ்டாலின் கோரிய பேரிடர் நிவாரணத்தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். நியாயமாக நமக்கு வர வேண்டிய நிலுவைத்தொகை வந்தால் நிவாரணத்தொகை உயர்த்த வாய்ப்புள்ளது’ என்று கூறியுள்ளார்.