நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசியதை தொடர்ந்து, கேள்வி எழுப்பிய எம்.பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் புனிதத்தை காக்கவே எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்பி சு.வெங்கடேசன், புனிதத்தை காக்க போடப்பட்ட சாம்பிராணி புகை தான் அந்த மஞ்சள் வண்ணபுகையா சபாநாயகரே என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “புனிதத்தை காக்க பாஸ் கொடுத்தவரை இனி புனிதர் என்று அழைக்கலாமா?. உங்களின் விசுவாசம் உண்மைக்கு எதிரானது” என குற்றம்சாட்டியுள்ளார்.