நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பரமக்குடியில் இன்று (ஏப்ரல் 3) நடந்த கூட்டத்தில் பேசிய கருணாஸ், “எடப்பாடி ஒரு தலைவரா?.. அவர் மக்களுக்காக என்ன செய்தார்?..” என கேள்வி எழுப்பினார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென கருணாஸிடம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.